தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு


தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:45 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 100 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து, நேற்று 1,501 கிலோவாக குறைந்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.403-க்கு விற்பனையான பட்டுக்கூடு, நேற்று கிலோவிற்கு ரூ.44 விலை அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.447-க்கும், குறைந்தபட்சமாக ரூ.215-க்கும், சராசரியாக ரூ.348.19-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.5 லட்சத்து 22 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு வர்த்தகம் நடந்தது.


Next Story