ரூ.6 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி அங்காடியில் ரூ.6 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்தது. மொத்தம் 1,539 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.488-க்கும், குறைந்தபட்சமாக ரூ.292-க்கும், சராசரியாக ரூ.396.01-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.6 லட்சத்து 9 ஆயிரத்து 835-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





