பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு


பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்தது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 935 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 2,106 கிலோவாக அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.734-க்கும், குறைந்தபட்சமாக ரூ.293-க்கும், சராசரியாக ரூ.638.22-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 500-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

1 More update

Next Story