ரூ.15¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை


ரூ.15¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
x

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.15¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை ஆனது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 2 டன் 179 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.770-க்கும், குறைந்தபட்சமாக ரூ.550-க்கும், சராசரியாக ரூ.701.09-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.15 லட்சத்து 28 ஆயிரத்து 174 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story