ரூ.15¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.15¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை ஆனது.
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 2 டன் 179 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.770-க்கும், குறைந்தபட்சமாக ரூ.550-க்கும், சராசரியாக ரூ.701.09-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.15 லட்சத்து 28 ஆயிரத்து 174 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





