பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு


பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
x

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரித்தது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 249 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து, நேற்று 2 ஆயிரத்து 955 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.534-க்கு விற்பனையானது. நேற்று கிலோவிற்கு ரூ.72 அதிகரித்தது. அதன்படி அதிகபட்சமாக ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.606-க்கும், குறைந்தபட்சமாக ரூ.225-க்கும், சராசரியாக ரூ.465.12-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.13 லட்சத்து 74 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு வர்த்தகம் நடந்தது.


Next Story