சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
சிவகாசி,
சிவகாசி இந்து நாடார் மகமை பண்டுக்கு சொந்தமான பத்திரகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, தன பூஜை, ஸ்ரீமகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீமகா லட்சுமி ஹோமம், பிரம்மசாரி பூஜை ஆகியவை நடைபெற்றது. இதேபோல் இன்று காலை 8 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, புண்யாகவாசனம், விசேஷ நந்தி பூஜை ஆகியவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





