கிணற்றில் எலும்புக்கூடு மீட்பு


கிணற்றில் எலும்புக்கூடு மீட்பு
x

எருமப்பட்டி அருகே கிணற்றில் கிடந்த எலும்புக்கூட்டை போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

நாமக்கல்

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள காவக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 68). கூலித்தொழிலாளி. இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த நடராஜன் காணாமல் போனார். இதுகுறித்து அவரது மகன் எருமப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காவக்காரப்பட்டி அருகே உள்ள கிணற்றில் எலும்புக்கூடு கிடப்பதாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்போில் போலீசார் எலும்புக்கூட்டை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் கிணற்றில் கிடந்த எலும்புக்கூடு அதே பகுதியில் காணாமல் போன நடராஜன் தானா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story