தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி கலெக்டர் தகவல்


தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி கலெக்டர் தகவல்
x

தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு,

தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி நடத்தப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

3 மாத கால திறன் பயிற்சியானது தமிழ்நாடு கட்டுமான கழகமானது கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து இந்த பயிற்சியை நடத்த உள்ளது.

பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12 மற்றும் ஐ.டி.ஐ. படிப்பு இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40-ஆக இருத்தல் வேண்டும், பயிற்சி வழங்கப்படும் தொழில்கள்:- கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார பயிற்சி, குழாய்பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர்,பயிற்சிக்கு கட்டணம் எதுவும் கிடையாது. உணவு, தங்குமிடம் போன்றவை இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சி பெறுவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சியானது தமிழ்நாடு கட்டுமான கழகம், கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து இந்த பயிற்சியை நடத்த உள்ளது. பயிற்சி காலம் 7 நாட்களுக்கு வழங்கப்படும்.

பயிற்சி நடைபெறும் இடம் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், தையூரில் அமையவுள்ள தமிழ்நாடு கட்டுமான கழகம். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும், பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து இருத்தல் வேண்டும். 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். பயிற்சி வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்றவைப்பவர், மின்சாரபயிற்சி, குழாய்பொருத்துனர், மரவேலை, கம்பிவளைப்பவர், மற்றும் பயிற்சியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும்.

தமிழ்நாடு கட்டுமான கழகம், கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இது குறித்து விவரங்கள் அறிய ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகவும். இந்த பயிற்சிகள் 2023 ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி முதல் தொடங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story