லோடு ஆட்டோவில் 164 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 பேர் கைது


லோடு ஆட்டோவில் 164 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jan 2023 6:45 PM GMT (Updated: 2 Jan 2023 6:46 PM GMT)

கூடங்குளத்தில் லோடு ஆட்டோவில் 164 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையில் தாமஸ் மண்டப பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பொருட்கள் ஏற்றி வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த 2 பேர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் லோடு ஆட்டோவில் இருந்த பொருட்களை சோதனை செய்தனர். அதில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 164 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து 2 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் லோகநாதன் (வயது 30), துரைராஜபுரத்தை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் விஜயகுமார் (23) என்பதும், புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.


Next Story