வீட்டின் தண்ணீர் தொட்டியில் கிடந்த 6 அடி நீள நல்ல பாம்பு

வீட்டின் தண்ணீர் தொட்டியில் கிடந்த 6 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விட்டனர்.
ராமநாதபுரம்
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்காரன் தெருவில் வசித்து வருபவர் சாதிக் அலி. இவரது வீட்டிற்குள் உள்ள தண்ணீர் தொட்டியில் சுமார் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்தவாறு இருப்பதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து உள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சாதிக் அலி குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். உடனே திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய பொறுப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நல்ல பாம்பை உயிருடன் பிடித்து அந்த பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டுஉள்ளனர்.
Related Tags :
Next Story






