பாம்பு கடித்து விவசாயி சாவு


பாம்பு கடித்து விவசாயி சாவு
x

திருப்பனந்தாள் அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தாா்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்;

திருப்பனந்தாள் அருகே கோட்டூர் தலையாரி தெருவை சேர்ந்தவர் தங்கராசு(வயது74). விவசாயியான இவர் கடந்த 28-ந் தேதி அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் வேலி கட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது.. இதில் மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராசு இறந்தார். இது குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story