நத்தம் அருகே வீடுகளில் புகுந்த பாம்புகள் பிடிபட்டன


நத்தம் அருகே வீடுகளில் புகுந்த பாம்புகள் பிடிபட்டன
x
தினத்தந்தி 19 Sep 2023 9:00 PM GMT (Updated: 19 Sep 2023 9:00 PM GMT)

நத்தம் அருகே வீடுகளில் புகுந்த பாம்புகள் பிடிபட்டன.

திண்டுக்கல்

நத்தம் அருகே உள்ள கோமனாம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 46). விவசாயி. இவரது வீட்டுக்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்ததும் குடும்பத்தினர் அலறியடித்தபடி வீட்டை வெளியே ஓடினர். பின்னர் இதுகுறித்து ஆனந்தன், நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு கரந்தமலை வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது.

இதேபோல் நத்தம் அருகே பாப்பாபட்டியை சேர்ந்த மனோஜ் (40) என்பவரது வீட்டுக்குள் பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு, கரந்தமலை வனப்பகுதியில் விடப்பட்டது.


Next Story