இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 9 பேர் வேட்பு மனு தாக்கல்


இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 9 பேர் வேட்பு மனு தாக்கல்
x

இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவி, 4 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும், அரியலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவி, 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வருகிற 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய அலுவலத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று வேப்பந்தட்டை ஒன்றியம் வி.களத்தூர் கிராம ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 21 வயதுடைய இளம்பெண் ஒருவரும், ஆலத்தூர் ஒன்றியம் இரூர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரைக்கும் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 4 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 5 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேட்பு மனு தாக்கல் கிடையாது. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.


Next Story