தந்தையை கொன்ற மகன் கைது


தந்தையை கொன்ற மகன் கைது
x

பள்ளிபாளையத்தில் தந்தையை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்:

சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 52) தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மஞ்சுளா (48) கடந்த 3 மாதத்திற்கு முன்பு கணவரிடம் கோபித்து கொண்டு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஐந்து பனைபகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார். உடன் அவரது மகன் கவினும் வந்துள்ளாா். நேற்று முன்தினம் இரவு பழனிச்சாமி ஐந்துபனை பகுதிக்கு சென்று மஞ்சுளாவை வீட்டிற்கு குடும்பம் நடத்த அழைத்தார். அதில் பழனிசாமிக்கும் மஞ்சுளா, கவினுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த மகன் கவின் அங்கிருந்த கல்லை எடுத்து தந்தை பழனிச்சாமியின் முகம், தலை ஆகிய இடங்களில் தாக்கியதாக ெதாிகிறது. இதில் பழனிச்சாமி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். இதனையடுத்து கவின் தப்பி ஓடி விட்டார். சம்பவம் பற்றி அறிந்த பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவினை தேடி வந்தனர். நேற்று மதியம் ஐந்து பனைபகுதியிலுள்ள ஒரு பேக்கரியில் அமர்ந்திருந்த கவினை போலீசார் கைது செய்தனா்.பின்னா் அவரை குமராபாளையம் கோர்ட்டில் ஆஜா்படுத்தினர். இதையடுத்து ேபாலீசாா் அவரை சேலம் மத்திய சிைறயில் அடைத்தனர்.


Next Story