மருமகன் கைது

மாமனாரை தாக்கிய மருமகன் கைது
பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த வடக்கு சங்கன்திரடு பார்வதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 70). அதே பகுதியை சேர்ந்த இவரது மருமகன் மாரியப்பன் (47). இவருக்கு சொந்தமான தங்க நகையை பேச்சிமுத்து அடகு வைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றவே மாரியப்பன், மாமனார் பேச்சிமுத்துவை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி பேச்சிமுத்து சுத்தமல்லி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ், மாரியப்பனை கைது செய்து விசாரித்து வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





