முன்னாள் அமைச்சர் மருமகன் தற்கொலை


முன்னாள் அமைச்சர் மருமகன் தற்கொலை
x

மதுரை கருப்பாயூரணி அருகே முன்னாள் அமைச்சரின் மருமகன் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை,

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பாஸ்கரன். இவரது மகள் சுமதி. இவர் தனது கணவர் சரவணன் (வயது 42) மற்றும் 2 குழந்தைகளுடன் மதுரை கருப்பாயூரணி அருகே ஒத்தப்பட்டி பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன் வீட்டில் தனி அறையில் படுத்திருந்தார். நேற்று காலையில் வழக்கமான நேரத்தில் அவர் எழுந்திருக்கவில்லை.

தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சுமதி, அவர் படுத்திருந்த அறை கதவை தட்டினார். ஆனாலும் அவர் எழுந்து வரவில்லை.

இதையடுத்து சரவணனின் சகோதரர் கர்ணன் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த அறையில் சரவணன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சரின் மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story