தென் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி


தென் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
x

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தென் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தென் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

விளையாட்டு போட்டி

சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவினையொட்டி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் உடற்கல்விதுறை சார்பில் தென் மாவட்டங்களை சேர்ந்த 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, கோ-கோ போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டிகளை ஸ்ரீகாளீஸ்வரி குழுமத்தின் இயக்குனர் ராஜேஷ் தொடங்கி வைத்தார். தென் மாவட்டங்கள் அளவில் நடைபெற்ற இந்த போட்டிகளில் 38 அணிகள் கலந்து கொண்டன. கைப்பந்து, கூடைப்பந்து போட்டிகளில் நெல்லை எம்.என்.எம்.அப்துல்ரகுமான் மேல்நிலைப்பள்ளியும், கபடி போட்டியில் ராஜபாளையம் ஆர்.சி.மீனாட்சி புரம் மேல்நிலைப்பள்ளியும், கோ-கோ போட்டியில் திருத்தங்கல் எஸ்.என்.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் முதல் இடத்தை பெற்றது.

புத்தக கண்காட்சி

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழில் அதிபர் ராஜேஷ் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதை தொடர்ந்து தமிழியல்துறை சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பாலமுருகன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் போட்டித்தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள், கவிதை, கதை, திறனாய்வு, பொது அறிவு, இலக்கியம், இலக்கணம் தொடர்பான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தமிழியல்துறைதலைவர் அமுதா செய்திருந்தார்.


Next Story