சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்


சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
x

சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கரூர்

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story