விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கரூர்
கரூர் அண்ணாசாலையில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று விநாயகருக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு பூக்களால் அலங்காரம், பூஜை செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நொய்யல் பகுதிகளில் விநாயகர்கள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






