சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்


சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
x

சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கரூர்

புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் கார்த்திகை மாத சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் குந்தாணி பாளையம் நத்தமேட்டு ஈஸ்வரன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story