ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்


ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
x

ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர்

நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள அஷ்டாதசபுஜ மகாலெட்சுமி, துர்க்கா தேவி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில், தோட்டக்குறிச்சி சொக்கநாதர் கோவில்களிலும் ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story