அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கரூர்
தவுட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகழூரில் உள்ள பாகவள்ளிஅம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் ஆடி மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் புன்னம் சத்திரம் அருகே உள்ள புன்னைவனநாதர் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி கோவில், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story