முனியப்ப சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை


முனியப்ப சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
x

முனியப்ப சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கரூர்

நொய்யல்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முனிநாதபுரத்தில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற முனியப்பசுவாமி மற்றும் மகாமுனி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பொங்கல், மாவிளக்கு பூஜையும், வாணவேடிக்கையும் நடைபெற்றது. நேற்று திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து முனியப்பசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து முனியப்ப சுவாமி மற்றும் மகா முனி சுவாமிக்கு பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து முனியப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முனியப்ப சுவாமி மற்றும் மகா முனி சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story