ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்


ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
x

ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் சிறப்பு முகாமினை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகராட்சி 13-வது வார்டு பகுதி பொதுமக்களுக்கு ஆதார் அட்டையில் திருத்தம், புதிய ஆதார் அட்டை எடுத்தல் போன்றவற்றிற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முகாமை ஏற்பாடு செய்த கவுன்சிலர் சாலினி சரவணனுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பாராட்டுகளை தெரிவித்தார். இதில் நகர செயலாளர் மணிகண்ட ராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி, கவுன்சிலர்கள் சபீனா, ஜெகதீஸ்வரி மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Next Story