ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம்; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நடக்கிறது


ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம்; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நடக்கிறது
x

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதி மாதம் 2-வது சனிக்கிழமை ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் பிரதி மாதம் ஒரு கிராமம் என நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் நாளை (சனிக்கிழமை) கீழ்க்கண்ட கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.

திருவள்ளூர் வட்டம் ரங்காபுரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை அருகில், ஊத்துக்கோட்டை வட்டம் நெல்வாய் கிராமம் ரேஷன் கடை அருகில், பூந்தமல்லி வட்டம் மேட்டுப்பாளையம் சமுதாயக்கூடம், திருத்தணி வட்டம் மணவூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பள்ளிப்பட்டு வட்டம் பேட்டை கண்டிகை ரேஷன் கடை அருகில், பொன்னேரி வட்டம் திருப்பேர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கும்மிடிப்பூண்டி வட்டம் பனப்பாக்கம் ரேஷன் கடை அருகில், ஆவடி வட்டம் நடுக்குத்தகை திருநின்றவூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஆர்.கே.பேட்டை வட்டம் ஜி.சி. எஸ் கண்டிகை ரேஷன் கடை அருகில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.


Next Story