10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தியதால் பரபரப்பு


10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 30 Jan 2023 6:46 PM GMT)

ஓசூர் ஜூஜூவாடி அரசு பள்ளியில் குடியரசு தினத்தன்று 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1,600 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். 10-ம் வகுப்பில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி பள்ளி வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றபோது மாடியில் வகுப்பறைகளில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கணித பாடம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. விழாவில் அந்த மாணவ, மாணவிகளை கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குடியரசு தின விழா அன்று மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்ட விவகாரம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story