சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம்


சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம்
x

கூத்தாநல்லூர் அருகே சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள சித்தாம்பூரில் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வியாழக்கிழமை வார வழிபாடு நடைபெற்றது. இதில் சாய்பாபாவுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story