மதுரை மத்திய சிறை அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை - கைதிகள் தயாரித்த பலகாரங்களுக்கு அமோக வரவேற்பு


மதுரை மத்திய சிறை அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை - கைதிகள் தயாரித்த பலகாரங்களுக்கு அமோக வரவேற்பு
x

மத்திய சிறை அங்காடியில் நடைபெறும் தீபாவளி சிறப்பு விற்பனையில் கைதிகள் தயாரித்த பலகாரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மதுரை,

மதுரை மத்திய சிறையில் உள்ள சிறை செய் பொருள் அங்காடியில், தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. அதில் இனிப்பு, காரம் உள்ளிட்ட தின்பண்டங்கள், நெய்யால் செய்யப்பட்ட பலகாரங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக சமையல் கலையில் நிபுணத்துவம் பெற்ற 25 கைதிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு சுகாதாரமான முறையில் பலகாரம் சுடுவது, பார்சல் செய்வது, சிறை அங்காடியில் விற்பனையில் ஈடுபடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


Next Story