பேரூர் படித்துறையில் பக்தர்கள் நீராட சிறப்பு வசதி


பேரூர் படித்துறையில் பக்தர்கள் நீராட சிறப்பு வசதி
x
தினத்தந்தி 17 July 2023 1:45 AM IST (Updated: 17 July 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் பக்தர்கள் நீராட சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்


பேரூர்


ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் பக்தர்கள் நீராட சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.


ஆடி அமாவாசை


கோவை மாவட்டம் பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் கோவில் அருகே, நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பண மண்டபம் உள்ளது. இது காசிக்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்பெற்றதாக கூறப்படுகிறது.


பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் கொடுத்து விட்டு, நீராடிய பிறகு பட்டீஸ்வரரை வழிபட்டால் முன்னோரின் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.


எனவே தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பிறமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் பேரூர் வந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு செல்கிறார்கள். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் இன்று (திங்கட்கிழமை) மற்றும் ஆகஸ்டு 16-ந் தேதியும் வருகிறது. இதனால் ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தர்ப்பண மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


படித்துறையில் நீராட வசதி


பேரூர் நொய்யல் ஆற்றில் தற்போது நீர்வரத்து இல்லாததால் ஆற்றங்கரை வறண்டு காணப்படுகிறது. இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்கள் நீராட நொய்யல் ஆற்றில் பேரூர் படித்துறையில் பைப்லைன் அமைத்து பிரத்யேக 'ஷவர்' வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இது பக்தர்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது.


மேலும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் ஆடி அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜை கள் நடக்கின்றன. மேலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.


சிறப்பு பஸ் வசதி


இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், ஆடி அமாவாசையையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பேரூருக்கு வருவார்கள். எனவே அவர்களின் வசதிக்காக காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.நொய்யல் ஆற்றுக்கு சித்திரைச்சாவடி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு அங்கிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்படி செய்தால் ஆடிபெருக்கு அன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் நொய்யல் ஆற்றில் நீராடி இறைவனை மகிழ்ச்சியாக வழிபட இயலும். எனவே மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை நிர்வாகமும் ஒருங்கிணைந்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறந்து விட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.


1 More update

Next Story