சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்


சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து, புகளூர் காந்தியார் மண்டபத்தில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story