ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்; நாளை நடக்கிறது


ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்; நாளை நடக்கிறது
x

ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்; நாளை நடக்கிறது

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் தற்போது ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினருக்கு என சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் தற்போது ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையினை மனுவாக கலெக்டரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனுவின் இரு பிரதிகளாக அடையாள அட்டை நகலுடன் அளிக்கலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story