மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி 7 மனுக்கள், வேலைவாய்ப்பு வேண்டி 5 மனுக்கள், 3 சக்கர சைக்கிள் வேண்டி 1 மனு, இலவச வீடு மற்றும் பட்டா வேண்டி 12 மனுக்கள், வங்கி கடன் வேண்டி 6 மனுக்கள், உதவித்தொகை வேண்டி 5 மனுக்கள், திருமண உதவித்தொகை வேண்டி 1 மனு, 100 நாள் வேலை முழு ஊதியம் கிடைக்க வேண்டி 2 மனுக்கள், சிறப்பு (ஏ.ஒய்.ஒய்.) குடும்ப அட்டை வேண்டி 1 மனு, உதவி உபகரணங்கள் வேண்டி 5 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் காதொலி கருவி, ஊன்றுகோல் போன்ற உதவி உபகரணங்கள் கேட்டு மனு அளித்த 3 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.


Next Story