ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்


ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்
x

ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கில் நடத்தப்படவுள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை மனுவாக கலெக்டரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனுவின் இரண்டு பிரதிகளை அடையாள அட்டை நகலுடன் அளிக்கலாம்.

இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.


Next Story