நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு விசாரணை முகாம்


நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு விசாரணை முகாம்
x

நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு விசாரணை முகாம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீசார் மற்றும் ஆலத்தூர் வட்ட வருவாய்த்துறையினர் இணைந்து தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாமை நேற்று நடத்தினர். இதில் ஆலத்தூர் வருவாய் தாசில்தார் முத்துகுமார், மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முகமது அபுபக்கர், குணாவதி மற்றும் போலீசார் ஆகியோர், பொதுமக்களிடம் இருந்து நிலம் தொடர்பான மனுக்களை பெற்றனர். இதில் 16 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.


Next Story