சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x

பள்ளூர் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளூர் ஊராட்சியில் நேற்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்தார். முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, இதய சிகிச்சை, மகப்பேறு, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை, வாய் புற்றுநோய், ரத்தம், சிறுநீர், சளி, தொழு நோய், காசநோய், குழந்தைகள் நலம் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் நெமிலி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அம்சா மாசிலாமணி, மருத்துவ குழுவினர், நெமிலி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேன்மொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story