தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

பாளையங்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
நெல்லை மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், பாளையங்கோட்டை ஜவகர் மைதான கலைஞர் பல்நோக்கு அரங்கில் நடந்தது. சுகாதாரக்குழு தலைவர் ரம்ஜான் அலி வரவேற்று பேசினார்.
மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். இதில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





