போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம்


போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம்
x

போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 16 மனுக்களை பெற்றார். பின்னர் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story