சிறப்பு மனு விசாரணை முகாம்


சிறப்பு மனு விசாரணை முகாம்
x

திருவண்ணாமலையில் சிறப்பு மனு விசாரணை முகாம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று விசாரணை நடத்தினார்.

முகாமில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் மேல் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.


Related Tags :
Next Story