சிறப்பு மனு விசாரணை முகாம்


சிறப்பு மனு விசாரணை முகாம்
x
தினத்தந்தி 23 Feb 2023 8:00 PM GMT (Updated: 24 Feb 2023 10:07 AM GMT)

சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 20 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மீண்டும் புதிய பஸ் நிலையம் செல்ல போலீசார் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story