தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமான நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன், காலபைரவர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவில், நீடாமங்கலம் காசிவிசுவநாதர்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





