தர்மபுரி பூவாடைக்காரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


தர்மபுரி பூவாடைக்காரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 22 Aug 2023 1:00 AM IST (Updated: 22 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி டவுன் எஸ்.வி.ரோட்டில் உள்ள பூவாடைக்காரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 18-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கணபதி பூஜை மற்றும் வாஸ்து பூஜைகள், யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து பூவாடைக்காரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

1 More update

Next Story