லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை


லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை
x

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் ராமானுஜர் சுவாமி பிறந்தநாளை முன்னிட்டு 10 நாள் உற்சவம் தொடங்கியது. நேற்று பக்தோசிதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ராமானுஜர் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தனித்தனி கேடயத்தில் பக்தோசிதப்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி, ராமானுஜர் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் சன்னதி தெரு கோடி வரை சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தனர். அப்போது வீடுதோறும் சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story