பழனி இடும்பன் மலைக்கோவிலில் சிறப்பு பூஜை

பழனி இடும்பன் மலைக்கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பழனியில், மலை மீது முருகன் அருள்பாலிப்பது போன்று அருகே உள்ள இடும்பன்மலையில் இடும்பன் அருள்பாலித்து வருகிறார். முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்னர் பக்தர்கள் இங்கு வந்தும் சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு விசேஷ நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறும். அதன்படி நேற்று பூஜை முறை குருக்கள் சார்பில் இடும்பன் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





