பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 15 Oct 2022 6:45 PM GMT (Updated: 15 Oct 2022 6:47 PM GMT)

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரிவரதராஜ பெருமாள்

புரட்டாசி மாதம் இந்துக்களின் புனித மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சி கடை வீதி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாளுக்கு பால், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். மேலும் மாலை 5 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார்.

இதேபோன்று டி.கோட்டாம்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோதண்டராமர் கோவிலில் சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

லட்சுமி நரசிம்மர் கோவில்

சோமந்துறைசித்தூரில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொள்ளாச்சி-பாலக்காடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் காலை 6 மணிக்கு மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.

அங்கலகுறிச்சி கோபால்சாமி மலை உச்சியில் உள்ள ருக்குமணி சத்யபாமா சமேத நந்தகோபால்சாமி கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதைதொடர்ந்து நந்தகோபால்சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுல்தான்பேட்டை அருகே செலக்கரிச்சல் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அபிஷேகம்

செட்டியக்காபாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் துளசி, அரளி, செவ்வந்தி, நந்தியாவட்டம் உள்ளிட்ட மலர்களால் அலங்கார பூஜை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சுவாமி சப்பரத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து, ஒவ்வொரு இடங்களில் கவ்வாளம் வழங்கப்பட்டது.

கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் பிரிவில் மகாலட்சுமி சமேத சாத்தூர் பெருமாள் சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணிக்கு முதற்கால பூஜையும், மதியம் 1 மணிக்கு 2-ம் கால பூஜையும், மாலை 6.30 மணிக்கு 3-ம் கால பூஜையும் நடந்தது. முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story