புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:46 PM GMT)

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

விழுப்புரம்

சிறப்பு பூஜை

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அந்த வகையில் விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள வரதராஜபெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

தொடர்ந்து, ஆனந்த வரதராஜ பெருமாளுக்கு பாண்டுரங்கன் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

வளவனூர்-கோலியனூர்

இதேபோல் வளவனூர் அக்ரஹாரத்தில் உள்ள அமிர்தவல்லி நாயிகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் காலை 6 மணிக்கு மூலவர், உற்சவ பெருமாளுக்கும், பின்னர் வெங்கடாஜலபதி பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கும், ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவ பெருமாளுக்கும் மற்றும் வெங்கடாஜலபதிக்கும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோலியனூர் வரதராஜபெருமாள் கோவிலில் காலை 8 மணிக்கு மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் மூலவருக்கு பரம பதா என்னும் ஸ்ரீ வைகுண்டநாதர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் காட்சியளித்தார். உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில், அரசமங்கலம் வரதராஜபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 4-ம் சனிக்கிழமையை முன்னிட்டு மூலவருக்கும், ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜையை கோவில் பட்டாட்சாரியார் மாலோலன் முன் நின்று செய்தார். விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.


Next Story