நவராத்திரி விழாவையொட்டிசங்கராபுரம் வாசவி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


நவராத்திரி விழாவையொட்டிசங்கராபுரம் வாசவி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:47 PM GMT)

நவராத்திரி விழாவையொட்டி சங்கராபுரம் வாசவி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

சங்கராபுரம் பகுதிக்குட்பட்ட பெரும்பாலான கோவில்களில் கொலு வைக்கப்பட்டு கடந்த 15-ந்தேதி முதல் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி தினமும் கொலு முன்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சங்கராபுரத்தில் உள்ள வாசவி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் மாலை வாசவி அம்மன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு அருகே சிறப்பு அலங்காரத்தில் வாசவி அம்மன், துர்க்கை அம்மன் சாமிகள் எழுந்தருளினர். அதன்பின்னர் அம்மனுக்கும், கொலுவுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் சங்கராபுரம் சன்னதி தெருவில் உள்ள மணிமங்கலநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் கோவில், முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், பாண்டலம் ஏரிக்கரை துர்கையம்மன் கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.


Next Story