சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை


சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 3 Jun 2023 1:15 AM IST (Updated: 3 Jun 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்படி பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் மாலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் கோவிலை வலம் வந்தார். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பினர். இதேபோன்று பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

1 More update

Next Story