சிறுமளஞ்சி சுடலை ஆண்டவர் கோவிலில் சிறப்பு பூஜை

சிறுமளஞ்சி சுடலை ஆண்டவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
வள்ளியூர்:
சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவிலில் ஆவணி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





