தோகைமலை வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை


தோகைமலை வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
x

தோகைமலை வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர்

தோகைமலை அருகே உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணியளவில் இப்பகுதியில் உள்ள இளம்பெண்கள் கோவிலை சுற்றி தண்ணீரை தெளித்து சுத்தம் செய்தனர். பின்னர் பல்வேறு வண்ணங்களில் கோலமிட்டு மகிழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story