கோவிலில் சிறப்பு பூஜை


கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து கால பைரவருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story